×

ஜோலார்பேட்டை அருகே குடும்ப தகராறில் பயங்கரம் முன்னாள் ராணுவ வீரர் கட்டையால் அடித்துக் கொலை: 2வது மனைவி, மைத்துனர் கைது

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கம்மியம்பட்டு ஊராட்சி பூனைக்குட்டி பள்ளம் பகுதியை சேர்ந்தவர் யாழரசன்(47), முன்னாள் ராணுவ வீரர். இவரது 2வது மனைவி பிரதீபா(33). காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். யாழரசனுக்கு மது பழக்கம் இருந்துள்ளது. பிரதீபா தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். அவரது நடத்தை தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதீபா தாய் வீடான கலர் வட்டத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் அ்ங்கு சென்ற யாழரசன், பிரதீபாவை வீட்டிற்கு அழைத்துள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அவர் முதலில் கட்டையால் பிரதீபாவை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரதீபாவும், அவரது அண்ணன் திருப்பதியும்(38) யாழரசனை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த யாழரசன் மருத்துவமனை யில் நேற்று இறந்தார். போலீசார் பிரதீபாவையும், திருப்பதியையும் கைது செய்தனர்.

The post ஜோலார்பேட்டை அருகே குடும்ப தகராறில் பயங்கரம் முன்னாள் ராணுவ வீரர் கட்டையால் அடித்துக் கொலை: 2வது மனைவி, மைத்துனர் கைது appeared first on Dinakaran.

Tags : Jolarpet ,Yalarasan ,Boengkutty Pallam ,Big Kammiyampattu Panchayat ,Tirupathur district ,
× RELATED சிக்னல் கோளாறால் சென்னை ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி